TNPSC Current Affairs – April 11 2018 – Tamil (tnpscguru.in) - TNPSC GURU - TNPSC Group 2A/2 Apply Online - Join Test batch

Latest

Post Top Ad

Saturday, April 14

TNPSC Current Affairs – April 11 2018 – Tamil (tnpscguru.in)


TNPSC Current Affairs - April 2018 by TNPSC Guru
TNPSC Current Affairs – April 11 2018 – Tamil (tnpscguru.in)


1) தற்பாதுகாப்பு கண்காட்சி 2018
  • இந்தியாவில் நடக்கும் பத்தாவது தற்காப்பு கண்காட்சியானது காஞ்சிபுரத்தின் திருவிடந்தை என்னும் இடத்தில் ஆரம்பமானது 
  • இதன் முக்கிய நோக்கம் உலகில் பாதுகாப்பு உற்பத்திக்கான ஒரு முக்கிய மையமாக இந்தியாவை வெளிப்படுத்த வேண்டும் என்பதாகும்
2) கடற்படை வீரர்களின் தகுதி சான்றிதழ்கள் பரஸ்பர அங்கீகரிப்பில் ஒப்பந்தம்
  • தென் கொரியாவின் புசன் பகுதியில் உள்ள கடற்படை வீரர்களின் தகுதி சான்றிதழ்களை அங்கீகரிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் இந்தியா மற்றும் கொரியா குடியரசு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.
  • கடற்படை கல்வி மற்றும் பயிற்சி, தகுதி, ஒப்புதல் மற்றும் ஒருவரினால் வழங்கப்பட்ட கடற்படை வீரர்களின் மருத்துவ தகுதி ஆகியவற்றின் சான்றிதழ்களை கண்டறிந்து சேரி பார்க்க இந்த உடன்படிக்கை உதவுகிறது.
3) ஓ.வி.எல்-ன் பார்சாத்-பி கேஸ் ( OVL’s Farzad-B gas )

  • பாரசீக வளைகுடாவில் ஓ.என்.ஜி.சி. விதேஷ் குழுமம் ( ONGC Videsh Ltd (OVL) ) மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பர்சாத்-பி ( Farzad-B ) எனப்படும் எரிவாயுத் துறையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவை ஈரான் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது
4) உலக ஹோமியோபதி தினம்
  • ஹோமியோபதி டாக்டர் ஃபிரட்ரிச் சாமுவேல் ஹன்மான்மன் நிறுவனர் மற்றும் ஹோமியோபதியின் தந்தை என அழைக்கப்படும் இவருக்கு அஞ்சலி செலுத்த ஏப்ரல் 10 ஆம் தேதி உலக ஹோமியோபதி தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
5) இந்தியாவின் முதல் அதிவேக மின் எந்திரம்
  • இந்திய ரயில்வே 12,000 குதிரைத் திறன் வேகத்துடன் இந்தியாவின் முதல் அதிவேக மின்ரயிலை நிறுவுகிறது
  • இது பீகாரின் மாதேபுரா என்னும் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் 
  • 12,000 குதிரைத் திறன் மற்றும் அதிக திறன் மின் ரயில்களை கொண்ட ரஷ்யா, சீனா, ஜேர்மனி மற்றும் சுவீடன் உட்பட நாடுகளின் உயர்ந்த பட்டியலில் இந்தியா இணைகிறது
6) 11 வது உலக ஹிந்தி மாநாடு
  • 11-வது உலக ஹிந்தி மாநாடு மொரீசியஸ்-ல் வைத்து நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது 
7) மகிழ்ச்சி நகரங்கள் மாநாடு 2018 
  • இந்நிகழ்வை ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு துவங்கி வைத்தார் 
  • மூன்று நாள் தொடர் கூட்டமான இது ஆந்திராவின் அமராவதி என்னும் இடத்தில் வைத்து நடைபெறுகிறது 
  • இதன் நோக்கம் இந்திய நகரங்களை மகிழ்ச்சியான நகரங்களாக மாற்றுவது ஆகும்

No comments:

Post a Comment

Post your feedback and doubts in the comment box below.

Thanks for visiting our Website..

Post Top Ad